சொந்த இனம் என்பதற்காக செய்த தவறுகளை மறப்பதா

mpமலாய்க்காரர்கள்,  சொந்த  இனத்தார்  என்பதால்  ஊழலையும்  அதிகார  அத்துமீறலையும்  கண்டும் காணாதிருப்பது  முறையா  என  துணிச்சலுக்குப்  பெயர்பெற்ற டிஏபி  தலைவர்  ஒருவர்  கேட்டிருக்கிறார்.

அரிப்  சப்ரி  தம்  வலைப்பதிவில்,  “இனம்  என்பதற்காக  அதிகாரமீறல்கள், அடக்குமுறை,  திறமையின்மை,  தேசிய  வளத்தைச்  அள்ளியிறைத்தல், பெரும்பான்மை  மக்களை   வறுமையில்  உழல  வைத்தல்  ஆகியவற்றை  மறந்துவிடலாகுமா.

“கொடுமைப்படுத்தி  ஒடுக்கி வைப்பவர்களும்  மலாய்க்காரர்கள்,  ஒடுக்கப்படுபவர்களும்  மலாய்க்காரர்கள். இந்த நிலைமையில், நீங்கள்  எந்தப்  பக்கம்?”,  என்றவர்  வினவி  இருந்தார்.

அம்னோ  ஆதரவாளர்கள் அக்கட்சிக்கும்  நாட்டைக்  கொள்ளையிடும்  அதன்  திட்டங்களுக்கும்  ஆதரவாக  இருக்கலாம் ஆனால்,  தம்மைப்  போன்ற  மலாய்க்காரர்கள்  அப்படி  இருக்க  மாட்டார்கள்  என்றாரவர்.

“எங்கள்  நோக்கம்  தெளிவானது.  சட்டப்பூர்வமான  வழிகளில்  அம்னோ  தலைமையிலான  அரசாங்கத்தைக்  கவிழ்ப்பதே  எங்களின்  நோக்கம்”,  என  அந்த  ராவுப்  எம்பி  கூறினார்.