திரெங்கானு எம்பி அஹ்மட் சைட் பதவி விலகினார்

mbதிரெங்கானு  மந்திரி  புசார்  அஹ்மட்  சைட்  பதவி  துறந்தார்.  ப்திய  மந்திரி  புசாராக  செபராங்  தகிர்  சட்டமன்ற  உறுப்பினர்  அப்துல்  ரசிப்  அப்துல்  ரஹ்மான்  இன்றிரவு இஷ்யா  தொழுகைக்குப்  பின்னர்  பதவி  ஏற்பார்  எனத்  தெரிகிறது.

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குடன்  செய்துகொள்ளப்பட்ட  ஓர்  உடன்பாட்டின்படி  அஹ்மட்  சைட்  பதவி  விலகுவார்  என்று பரவலாகவே  பேசப்பட்டு  வந்தது.

கடந்த  ஆண்டு  13வது  பொதுத்  தேர்தலில்  திரெங்கானு  கிட்டத்ட்ட   கைநழுவிப் போகும்  நிலை  ஏற்பட்டதை  அடுத்து அஹ்மட்  சைட்  ஓராண்டு  மட்டும்  மந்திரி  புசாராக  இருந்துவிட்டு  விலகுவது  என்று  உடன்பாடு  காணப்பட்டதாம்.