திரெங்கானு சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தல் நடத்துக

aziz-bariதிரெங்கானுவில்  முன்னாள்  மந்திரி  புசார்  அஹமட்  சைட்  உள்பட  மூன்று  சட்டமன்ற  உறுப்பினர்கள்  அம்னோவிலிருந்து  விலயதைத்  தொடர்ந்து  பிஎன்  சிறுபான்மை  அரசாகியுள்ளதால்  மாநிலச்  சட்டமன்றம்  கலைக்கப்பட  வேண்டும்  என்று  அரசமைப்புச் சட்ட வல்லுனர்  ஒருவர்  கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அரசமைப்புப்படி  பிஎன்  அங்கு  தொடர்ந்து  ஆட்சி  செய்வது  இயலாது  என   அப்துல்  அசீஸ்  பாரி  கூறினார்.

“சுல்தான் சட்டமன்றத்தில் பெரும்பான்மை  பெற்றுள்ள  கட்சியை  நியமிக்க வேண்டும்  அல்லது  மன்றத்தைக்   கலைக்க வேண்டும். மாநிலச்  சட்டமன்றத்தைக்  கலைப்பதே  மேலானது  என  நினைக்கிறேன்”,  என  அசீஸ்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.