போலீஸ் காவலில் கணவர் காயமடைந்ததாக மனைவி புகார்

pushpaஈப்போ  போலீஸ்  தலைமையகத்தில்  போலீஸ்  காவலில்  வைக்கப்பட்டிருந்த  தம்  கணவர்  காயமடைந்திருப்பதாக  எம்.புஷ்பா,37,  புகார்  செய்துள்ளார்.

மே  14-இல்,  தம்  கணவர்  நினைவிழந்த  நிலையில்  ராஜா  பெர்மைசுரி  பைனுன்  மருத்துவமனையின் தீவிர  கவனிப்புப்  பிரிவில்  சேர்க்கப்பட்டிருப்பதாக  போலீசிடமிருந்து  தகவல்  கிடைத்தது  என புஷ்பா  கூறினார்.

மே  7-இல்,  ஈப்போ  செஷன்ஸ்  நீதிமன்றத்தில்  அவரைச்  சந்தித்தபோது  நல்ல  நிலையில்  இருந்தார்  என்பதால்,  அவரது இப்போதைய  நிலை  “மிகவும்  கவலை தருவதாக”  அவர்  குறிப்பிட்டார்.

“மே  15-அன்றே புகார்  செய்ய  முயன்றேன்.  ஆனால் (போலீஸ்) அனுமதிக்கவில்லை……அதனால்  இப்போது  வழக்குரைஞர்  உதவியை  நாடியுள்ளேன்”, என  புஷ்பா  கூறினார்.  அவருடன்  வழக்குரைஞர்  எம்.குலசேகரனும்  வந்திருந்தார்.