சுரேந்திரன் இனி நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க மாட்டார்

pkr_n_surendran_01பாடாங்  செராய்  எம்பி  என்.சுரேந்திரன், இனி  நாடாளுமன்றத்தில்  கேள்வி  கேட்க  மாட்டார்.  உறுப்பினர்களின்  கேள்விகளுக்குப்  பதிலளிக்க நீண்ட  காலம்  ஆவதால்  அதற்கு  எதிர்ப்புத்  தெரிவிக்கும்  வகையில்  அவர்  இம்முடிவுக்கு  வந்துள்ளார்.

நாடாளுமன்றத்தின்  அடுத்த  கூட்டம்  ஜூன்  9-இல்  தொடங்கும். எம்பிகள்  மே  19-க்குள்  கேள்விகளைத்  தாக்கல்  செய்ய  வேண்டும்  என்று  கூறப்பட்டுள்ளது. இதனால்,  கேள்விகளுக்குப்  பதில்  கிடைக்க  ஒரு  மாதத்துக்குமேல்  ஆகிறது.

“இதனால்  நாங்கள்  நடப்பு  விவகாரங்கள் பற்றிக்  கேள்வி  எழுப்ப  முடியாமல்  போய்விடுகிறது. கேள்விகளுக்குப்  பதிலளிக்கப்படும்போது  அவை  காலம்கடந்தவையாக,  அர்த்தமற்றவையாக  ஆகி  விடு  விடுகின்றன”,என்று  சுரேந்திரன்  கூறினார்.