மலாய் என்பது இனம், அம்னோ என்பது ஒரு கட்சி:அன்வார்

anwஅம்னோவைக்  குறைகூறுவது  மலாய்க்காரரையும்  இஸ்லாத்தையும்  சிறுமைப்படுத்துவதாகும்  என  இன-வாத  கூச்சல்  போடுவதை  அக்கட்சி  நிறுத்த  வேண்டும்  என்கிறார்  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்.

அம்னோ, தான்  ஒரு  கட்சி  என்பதையும்  மலாய்  என்பது  ஓர்  இனம் என்பதையும்  உணர  வேண்டும். என்றாரவர். அம்னோவில்  கிறிஸ்துவ உறுப்பினர்கள்  உள்ளனர்.  அவர்கள்  மலாய்க்காரர்கள்-அல்லர்  ஆனாலும்  பூமிபுத்ராக்கள்  என்பதை  அவர்  நினைவுறுத்தினார்.

“அம்னோ மலாய்க்காரர்களைப்  பிரதிநிதிப்பது  உண்மையே.  ஆனால், சாபா, சரவாக்கில்  கிறிஸ்துவ  உறுப்பினர்களும்  அத்ற்கு  உண்டு.

“மலாய்  என்பது  இனம். அம்னோ  என்பது  கட்சி. அதனால்  மலாய்க்காரர்தான்  அம்னோ  என்று  நான்  சொல்ல  மாட்டேன்”, என்று  அன்வார்  கூறினார்.

அவர், நேற்றிரவு  தெலோக் இந்தானில்  பேராக்  பிகேஆர்  இளைஞர்  நடவடிக்கை  மையத்தில்  200 பேர்  அடங்கிய  ஒரு  கூட்டத்தில்  பேசினார்.