ஜாஹிட்: டிஏபி-க்கு வாக்களிக்கும் சீனர்கள் ‘நன்றிகெட்டவர்கள்’

zahidடிஏபிக்கு  வாக்களிக்கும்  சீனர்கள்,  குறிப்பாக  பணக்கார  வியாபாரிகள் “நன்றி கெட்டவர்கள்”  என  அம்னோ  உதவித்  தலைவர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  கூறினார்.

“மலாய்க்காரர்களும்  இந்தியர்களும்  சீன  வியாபாரிகளுக்கு  ஆதரவாக  இருக்கிறார்கள்…….அவர்கள்  வியாபாரத்தில்  உயர்ந்த  நிலைக்கு  வந்ததும்  டிஏபி-க்கு  வாக்களிக்கிறார்கள். அது  நன்றிகெட்ட  தனம்  அல்லவா?”,  என்றவர் வினவ  அவரது பேச்சைக்  கேட்டுக்கொண்டிருந்த  கூட்டத்தினர்  ஆமாம்  என்றனர்.

டிஏபி-க்கு  வாக்களிப்பதன்  மூலம்  இந்தப்  பணக்கார  சீனர்கள்  உதவி  தேவைப்படும்  மலாய்க்காரர்களையும்  இந்தியர்களையும்  புறக்கணிக்கிறார்கள்  என்று  உள்துறை  அமைச்சருமான  ஜாஹிட்  கூறினார்.

ஆனால்,  சீனர்கள்  டிஏபி-க்கு  வாக்களிப்பதால்  இந்தியர்களுக்கும்  மலாய்க்காரர்களுக்கும்  கிடைக்க  வேண்டிய  உதவி  கிடைக்காமல்  போவது  எப்படி  என்பதை  அவர்  விவரிக்கவில்லை.