காணாமல்போன விமானம் பற்றிய விவரங்களை மலேசியாவும் இன்மார்செட்டும் வெளியிட்டன

mhமலேசிய  சிவில்  விமானப்  போக்குவரத்து  துறையும்  பிரிட்டனின் செயற்கைத்  துணைக்கோள  நிறுவனமான  இன்மார்செட்டும்  எம்எச்370  விமானத்தின்  பாதையை  முடிவுசெய்வதற்குப்  பயன்பட்ட  முழு  விவரங்களையும்  இன்று  வெள்யிட்டன.

அந்த  விவரங்கள்  அடங்கிய  அறிக்கையைப்  பெற்றுக்கொண்டதாக  காணாமல்போன  விமானத்தில்  பயணம்  செய்தவர்களின்  உறவினர்கள்  தெரிவித்தனர்.

மார்ச் 8-இல்,  கோலாலும்பூரிலிருந்து  பெய்ஜிங்குக்கு 239  பயணிகள், பணியாளர்களுடன் பயணித்த அந்த  போயிங்  விமானம்   காணாமல்போனது. ஆஸ்திரேலியாவுக்கு  அப்பால்  இந்தியப்  பெருங்கடலில்  அது  விழுந்திருக்கலாம்  என  நம்பப்படுகிறது.