‘நன்றி கெட்டவர்கள்’ என்று மீண்டும் சொல்லி விடாதீர்கள்: ஜாஹிட்டுக்கு மஇகா நினைவுறுத்து

subraஉள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி, “நன்றி  கெட்டவர்கள்”என்று  தெலோக்  இந்தான்  இந்திய  வாக்காளர்களிடமும்  சொல்லிவிடாமல்  இருக்க  வேண்டும்  என  மஇகா  நினைவுறுத்தியுள்ளது.

இப்படிப்பட்ட  பேச்சு  இடைத்  தேர்தலில்  பிஎன் வாய்ப்புகளைக்  குறைத்துவிடலாம்  என  மஇகா  துணைத்  தலைவர்  டாக்டர்  எஸ்.சுப்ரமணியம்  கூறினார்.

நேற்று  தெலோக்  இந்தானில்  மலாய்  கம்பம்  ஒன்றில்  பேசிய  ஜாஹிட்,  டிஏபி-க்கு  வாக்களிக்கும்  சீனர்களை  நன்றி  கெட்டவர்கள்  என்று  குறிப்பிட்டது  தவறு  என்று  சுகாதார  அமைச்சருமான  சுப்ரமணியம்  தெரிவித்தார்.

இப்படிப்  பேசுவதை தவிர்க்க  வேண்டும் என்றவர்  கேட்டுக்கொண்டார். .