மா: வெளியூர் வாக்காளர்களா நகரின் தலைவிதியைத் தீர்மானிப்பது?

mah 1தெலோக்  இந்தான்  இடைத்  தேர்தலில்  போட்டியிடும்  பிஎன்  வேட்பாளர்,  அந்நகரின்  தலைவிதியைத்  தீர்மானிக்கும்  பொறுப்பை  வெளியூர்  வாக்காளர்களிடம்  விட்டுவிடக்  கூடாது  என்று  உள்ளூர்  மக்களிடம்  வலியுறுத்தினார்.

வெளியூரிலிருந்து  வரும்  வாக்காளர்களை “வெளியார்” என்று  குறிப்பிட்ட  மா,  அவர்கள்  எதிரணி-ஆதரவாளர்கள்  என்றும்  உள்ளூர்  பிரச்னைகள்  பற்றிக்  கவலைப்படாதவர்கள்  என்றும்  கூறினார்.

“நம்  எதிர்காலத்தை  ஏன்  வெளியார்  தீர்மானிக்க  வேண்டும்?” என  இன்று  இந்திய  என்ஜிஓ  உறுப்பினர்கள்  200  பேரிடம்  பேசியபோது  மா   வினவினார்.