சுரேந்திரன்: நாடாளுமன்றத்தால் பொதுப்பணம்தான் வீணாகிறது

surenranநாடாளுமன்றம்  அரசாங்கத்தின்  சட்ட  வரைவுகளையும்  தீர்மானங்களையும்  நிறைவேற்றும்  ஒரு  ரப்பர்  முத்திரையாக  மட்டும்  தொடர்ந்து  செயல்பட்டுக்  கொண்டிருந்தால்  அது பொதுப்பணத்தை  விரயமாகும்  அமைப்பாகத்தான்  விளங்கும்.

“பக்காத்தான்  ரக்யாட் எம்பிகள்  முன்வைக்கும்  பரிந்துரைகள்  ஏற்கப்படுவதில்லை.  கேள்விகள்  கேட்பதற்கு  மட்டுமே  அனுமதிக்கப்படுகிறோம். நிறைய  எம்பிகள்  இருப்பதால்  கேள்விகள்  கேட்கும்  வாய்ப்புக்காக  காத்திருக்க  வேண்டும்”,  என்று  பிகேஆர்  நாடாளுமன்ற  உறுப்பினர் என். சுரேந்திரன்  கூறினார்.

எதிரணியினர்  கூடுதல்  விவகாரங்களை  எழுப்பவும்  விவாதிக்கவும்  இடமளிக்க  நாடாளுமன்றத்துக்கு  அவசர  சீரமைப்பு தேவை  என்றாரவர்.