தீபாவின் குழந்தை பராமரிப்பு சச்சரவு: போலீஸ் நடவடிக்கை இன்னும் முடிவு செய்யப்படவில்லை, ஹமிடி

 

S.Theebaமத மாற்றம் காரணமாக கிளம்பும் குழந்தை பராமரிப்பு சச்சரவுகளை தீர்த்து வைப்பதற்கு போலீஸ் நடவடிக்கையில் இறங்குமா என்பது குறித்து அரசாங்கம் இன்னும் எந்த ஒரு முடிவுக்கும் வரவில்லை என்று உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறுகிறார்.

எஸ். தீபாவுக்கு அவரது குழந்தையை பராமரிக்கும் உரிமை இருக்கிறது. ஆகவே, போலீAhmad_Zahid_Hamidi

சார் தீபாவின் மகனை இஸ்லாத்துக்கு மதம் மாறிவிட்ட அவரது முன்னாள் கணவரிடமிருந்து மீட்க வேண்டும் என்று பிரதமர்துறை அமைச்சர் நேன்சி சூகிரி கேட்டுகொண்டிருந்தற்கு எதிர்வினையாற்றிய அமைச்சர் ஹமிடி இவ்வாறு கூறினார்.

“நாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. நான் அவருடனும் (நேன்சி), சட்டத்துறை அலுவலகத்துடனும் எம்மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து விவாதிப்பேன்”, என்று இன்று செராஸ்சில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ஹமிடி கூறினார்.

TAGS: