இந்நாட்டில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் மத மாற்றம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு காரணம் தேசிய பதிவு இலாகாதான் என்று கூறுகிறார் புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் இங்கே கூ ஹாம்.
“சமீபகாலத்தில் மதம் சம்பந்தப்பட்ட சச்சரவுகளும் பதற்றங்களும் ஏற்படுவதற்கு சில தரப்புகள், குறிப்பாக தேசிய பதிவு இலாகா, மலேசிய அரசமைப்புச் சட்டப் பிரிவுகளை மதித்து அவற்றை நிலைநிறுத்தாததுதான் காரணம்”, என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
இதற்கு முன்பு, முஸ்லிம் அல்லாத ஒருவர் எவ்விதப் பிரச்சனையும் இன்றி இஸ்லாத்திற்கு மதம் மாறலாம் மற்றும் அதிலிருந்து வெளியேறலாம். ஏனென்றால், தேசிய பதிவு இலாகா மதம் மாற விரும்புகிறவரின் நோக்கத்தைக் குறிப்பிடும் ஒரு சத்தியப் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டது.
உண்மையில், அவ்வாறான மாற்றங்கள் அனுமதிக்கப்படுவது குறித்து தேசிய பதிவு இலாகா 30 ஆண்டுகளுக்கு முன்பு நாளிதழ்களில் விளம்பரம்கூட செய்துள்ளது.
“பின்னர், முஸ்லிம்களின் உணர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், அவ்வாறு விளம்பரம் செய்வது ஏற்புடையதல்ல என்று கூறப்பட்டது.
“அதன் பிறகு, ஒருவர் இஸ்லாத்தை விட்டு விலகி விட்டார் என்பதை உறுதிப்படுத்தும் கடிதம் ஒன்றை இஸ்லாமிய சமய மன்றம் அல்லது இஸ்லாமிய விவகார இலாகா வெளியிடும் என்றும் தேசிய பதிவு இலாகா சம்பந்தப்பட்டவரின் அடையாள அட்டையில் தேவையான மாற்றங்களைச் செய்வதற்கு அக்கடிதம் போதுமானது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது”, என்று இங்கே தெளிவுப்படுத்தினார்.
ஆனால், தேசிய பதிவு இலாகா கடினமான போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருவதோடு, இப்போது மதம் மாறியவர்கள் அதனை உறுதிப்படுத்தும் பிரகடனத்தை ஷரியா நீதிமன்றத்திடமிருந்து பெற்று வர வேண்டும் என்று கோருகிறது என்றாரவர்.
“அவ்வாறான கோரிக்கை அரசமைப்புச் சட்டம் 11(1) ஐ மீறுவதாகும் என்றும் அவர் கூறினார்.


























தலிபான் … சட்டங்கள் ..கலாசாரம் …சரித்திரம் இவைகளை பற்றி கவலை படுவதில்லை ஒரு சீனன் இவ்வளவு விளக்கமாக சொல்கின்றான் …ம .இ .கா டலைவர்கள் வாயில் கொளுகட்டையா ..பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் ..ஏன் தானை தலைவர் பேசவே மாட்டாரா ?
சீனனுக்கு உள்ள தைரியம்,பிளடி இந்தியன்களுக்கு இல்லை.
கொலை ,வெட்டோ வெட்டு இந்தியன் ஓகே
ஒரு முஸ்லிம் ஒரு இந்து ஒரு புத்த அதிகாரி அமைத்தால் ,
பிரச்னை தீரும் …!
மற்றவர்களை குறை சொல்லாமல், அடுத்த தொடர் நடவடிக்கை என்ன என்பதை அடையாளம் கண்டு நல்ல தீர்வு காண வேண்டும். இது போன்ற அறிக்கைகள் வழி சில அரசியல் லாபம் தேட முயல்வதை தவிர்க்க வேண்டும். பல காரணங்களுக்காக, அல்லது சுயநலத்திற்காக பலர் மதம் மாறுகின்றனர். இஸ்லாம் மதத்திற்கும், கிருத்துவ மதத்திற்கும் விரும்பியே மதம் மாறுகின்றனர். பின்னாளில் ஏற்படும் சில கசப்பான சம்பவங்களால் அங்கிருந்து வெளியில் வர எத்தணிக்கின்றனர். தொடக்கத்திலேயே அவர்கள் நின்றாக யோசித்து அல்லது மற்றவர்களின் ஆலோசனைகளை கேட்டாவது மதமு மாறி இருக்க வேண்டும், பிறகு வருந்துவதில் எந்த பலனும் இல்லை.
ஐயா, சுதந்திரம் என்றல் என்ன? தயவு செய்து கூறுவிர்கல! இங்கே ஒன்றும் விளங்க வில்லை.
மதத்தால் மதம்பிடித்து திரிபவர்களிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது ! ஆகவே இந்துக்களும் ஒரு தீர்கமான முடிவுக்கு வரவேண்டும் !
இந்து மதத்தை சார்ந்தவர்கள் – ஒரு முஸ்லிம் அதிகாரியால் பதிவு திருமணம் செய்து வைப்பது சரியா ? அதை இந்துக்கள் ஏற்றுக்கொள்வது முறையாகுமா ? நாம் ஏன் எதிப்பு தெரிவிக்கக் கூடாது ? கழகங்கள் , மன்றங்கள் , NGO கள் , மற்றும் சமய பிரதிநிதிகள் ஆட்சேபம் தெரிவிக்கவேண்டும் ! ஒரு இந்து அதிகாரியே இந்துக்களுக்கு பதிவு திருமணம் நடத்தவேண்டும் என்று போராடவேண்டும் . சிந்தியுங்கள் !!
S S Rajulla – நீங்கள் சொன்னதை 100% மேல் ஆதரிக்கின்றேன். முஸ்லிம்களோ அல்லது மற்ற மதத்தினரோ இந்துக்களின் திருமணத்தை நடத்திவைக்க கூடாது. MIC MCA கம்மனாட்டிகள் என்ன கூறுகின்றனர்?
ரஜூல்லா… எப்படி இப்படியெல்லாம் சிந்திக்கிறீங்க? நல்ல யோசனை. பதிவிலாகாவில் நம்மவர்களுக்கு வேலைவாயப்பு கிடைத்தமாதிரியும் இருக்கும். அந்த அந்த சமயத்தவரே அவரவர்களின் திருமணப் பதிவை செய்தமாதிரியும் இருக்கும். நல்ல சிந்தனை, குரல் கொடுப்போம்!
இந்து களின் திருமணங்களை ஒரு இந்துவே நடத்த அரசாங்கம் 1982 ஆண்டு சட்டத்தை கொண்டுவந்தது ,ஆனால்
இதில் என்ன கொடுமை என்றால் நைனா , பதிவு திருமணத்தை நடத்த அரசாங்கம் பொது இயக்கங்கள் ,இந்து கோயில் களுக்கு திருமணத்தை நடத்த வாய்ப்பு வழங்கியது ,
இந்த திருமணங்களை பதிவு செய்ய தம்பதியரிடம் ஒரு \
காசும் வாங்க கூடாது என்று சட்டம் கூறினாலும் ,திருமணத்தை தங்களது இயக்கத்தின் அலுவகத்தில் தான்
நடத்த வேண்டும் திருமண துணை பதிவு அதிகாரி வெளியில் செய்ய கூடாது என்று கூறினாலும் ஒரு பதிவுக்கு தலா 200 வெள்ளியை வாங்குகிறார்கள் , புகார் கொடுத்தால்
நடவடிக்கை எடுக்குகிரார்கள் இதை லஞ்ச ஊழல் வாரியம்
கண்டு பிடிக்க வேண்டும் ,பட்டபகலில் திருமண துணை பதிவதிகாரிகள் கொள்ளை அடிப்பதால் சிலர் தங்களது திருமணத்தை பதிவு செய்வது இல்லை ,அரசாங்கம் மீண்டும் திருமண பதிவை ஏற்றுக்கொள்ளவேண்டும் .திருமண செய்யும் தம்பதிகள் ஏற்கனவே மணமான வர்களா
அல்லது வேறு மதமா என்பதை புரிந்துக் கொள்ளலாம் தில்லு
முள்ளுகள் நடைபெறாமைல் கண்ட்ரோல் பண்ணலாம் நைனா.