பண விரயங்களுக்கு அமைச்சர்களையே பொறுப்பாக்க வேண்டும்

TIதலைமைக் கணக்காய்வாளர்  அறிக்கை  வெளிச்சம்போட்டுக்  காட்டும்  பண  விரயங்களுக்கு  அந்தந்த  அமைச்சுக்களுக்குத்  தலைமைதாங்கும்  அமைச்சர்களையே  பொறுப்பாக்க  வேண்டும்  என  ட்ரேன்பேரன்சி  இண்டர்நேசனல்  வலியுறுத்தியுள்ளது.

அப்படிச்  செய்யாதவரை  கணக்கறிக்கையை  யாரும்  பொருட்படுத்தப்  போவதில்லை  என்று  அதன்  தலைவர் அக்பர் சத்தார்  கூறினார்.

“தங்களின்  நேர்மையையும்  தங்களுக்குக்  கீழே  பணிபுரிவோரின்  நேர்மையையும்  கட்டிக்காப்பது  அமைச்சின்  தலைவர்கள்  என்ற  முறையில்  ஒவ்வோர்   அமைச்சரின்  கடமையாகும்”,  என்றாரவர்.

நடைமுறைகள்  பின்பற்றப்படாத  இடங்களில்  சட்ட  நடவடிக்கை  எடுக்க  வேண்டும். அது  தக்க  பாடமாக  அமையும்  என அக்பர்  கூறினார்.

இவ்விசயத்தில்  அரசாங்கம் “மெத்தனமாக நடந்துகொள்கிறது”,  அதனால்தான்  ஒவ்வோர்  ஆண்டும்  இப்படிப்பட்ட  முறைகேடுகள்  திரும்பத்  திரும்ப  நடக்கின்றன  என்றாரவர்.