ஐஜிபி: தப்பு செய்யும் போலீஸ்காரர்களை நாங்கள் பாதுகாப்பது இல்லை

khaild igpதப்பு  செய்யும்  போலீஸ்காரர்கள்  பாதுகாக்கப்படுவதில்லை  என்பதை  வலியுறுத்தும் இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்கார், தப்பு  செய்ததற்கு ஆதாரங்கள்  இருக்குமானால்  அவர்களுக்கு  எதிராக  நடவடிக்கை  எடுக்கப்படுவது  உறுதி  என்றார்.

மைவாட்ச்  தலைவர்  ஆர்.ஸ்ரீ சஞ்சீவன்  அம்பலப்படுத்திய  பல  விவகாரங்கள்  குறித்து  கருத்துரைத்தபோது  அவர்  இவ்வாறு  கூறினார்.

சஞ்சீவன்  போலீசுக்கு  எதிராக  பல  குற்றச்சாட்டுகளைச்  சுமத்தினாலும்  விசாரணைக்கு  ஒத்துழைப்பதில்லை  என  காலிட்  கூறினார்.

“ஆதாரங்கள்  இருக்கும்பட்சத்தில்  எங்கள்  ஆள்களைப்  பாதுகாக்க  மாட்டோம். குற்றவியல்  வழக்குகளில்  எப்போதாவது  எங்கள்  ஆள்களைப்  பாதுகாத்திருக்கிறோமா?  ஆதாரங்கள்  இருந்தால்  கொண்டு  வாருங்கள்.

“சஞ்சீவனும்  அப்படித்தான். அதையும்  இதையும்  சொல்கிறார். (தகவல்பெற) அதிகாரிகளை  அனுப்பினால்  ஆதாரங்களைக்  கொடுக்க  மறுக்கிறார்”, என்றாரவர்.