வீடற்றோருக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்துக: சிசிஎம் வேண்டுகோள்

ccmவீடுவாசலற்றோருக்கும்  அவர்களுக்கு  உதவுவோருக்கும்  எதிரான  அத்தனை  நடவடிக்கைகளையும்  நிறுத்த  வேண்டும்  என்று   கிறிஸ்துவ  அமைப்பு  ஒன்று  அரசாங்கத்தைக்  கேட்டுக்கொண்டிருக்கிறது.

சமுதாயத்தில்  வறிய  நிலையில்  உள்ளவர்களுக்கு  எதிராகவும்  அவர்களுக்கு  உதவி  ‘பரிவுள்ள  சமுதாயம்’  என்று  காண்பித்துக்கொள்வோருக்கும்  எதிராகவும்   நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படும்  என  அறிவிக்கப்பட்டிருப்பதைக்  கண்டு  வருத்தமடைவதாக  தேவாலயங்கள்  மன்ற(சிசிஎம்)  இளைஞர்  பகுதி கூறியது.

மில்லியன்  கணக்கான  மலேசியர்கள்,  நோன்பிருந்தும்  இறைவழிபாட்டில்  ஈடுபட்டும்  தானதர்மங்கள்  செய்துகொண்டுமுள்ள  இந்த  நேரத்தில் இப்படி  அறிவித்திருப்பது “இரக்கமற்ற, பரிவற்ற  செயலாகும்”  என்று  அது  கூறிற்று.