கூ அட்னான் அவரது வீட்டிலேயே அத்தனை பேருக்கும் அடைக்கலம் அளிக்கலாம்

surenderகூட்டரசு  பிரதேசத்தில்  வீடுவாசலற்று  சுற்றித்திரிவோரை  ஒழித்துக்கட்டப்போவதாக   சூளுரைக்கும்  கூட்டரசு பிரதேச  அமைச்சர்  தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூர், அவர்கள்  அத்தனை  பேருக்கும்  அவரது  வீட்டிலேயே  இடமளிக்கலாம்.

ஜாலான்  டூட்டாவில்  உள்ள  தெங்கு  அட்னானின்  நான்கு-மாடி  வீடு  அவ்வளவு  பெரிது  என்கிறார் பிகேஆர்  எம்பி,  என்.சுரேந்திரன்.

அத்துடன்  கோலாலும்பூரில்   தடைவிதிக்கப்பட்ட  கஞ்சித் தொட்டிகளை  அவரது  வீட்டின்  அழகான  தோட்டத்தில்  அமைத்து  அன்னதானம்  செய்யவும்  ஏற்பாடு  செய்யலாம்.

“ஏழைகளை  இழிவுபடுத்திய  அவர் அதற்குப்  பரிகாரமாக இதையாவது  செய்யலாம்”,  என்றாரவர்..