‘சமூக வலைத்தளங்களில் நல்லிணக்கத்தைக் கெடுக்காதீர்’

abdul kareem bakhriசமூக  வலைத்தளங்களைப்  பயன்படுத்தி  நாட்டின்  நல்லிணக்கத்துக்கும்  பாதுகாப்புக்கும்  இறையாண்மைக்கும்  மிரட்டல்  விடுக்கக்  கூடாது  என  தற்காப்பு  துணை  அமைச்சர்  அப்துல்  கரிம்  பக்ரி  மக்களுக்கு  அறிவுறுத்தியுள்ளார்.

அப்படிச்  செய்வோரை  அரசாங்கம்  கண்காணித்து  வருவதாகவும்  தேவையானால்  சட்டப்படி  தகுந்த  நடவடிக்கைகளை  எடுக்கும்  எனவும்  அவர்  தெரிவித்தார்.

சில தரப்பினர், சமூக  வலைத்தளங்களைப் பயன்படுத்தி  நாட்டின்  ஒற்றுமையையும்  நிலைத்தன்மையையும் கெடுக்கும்  நோக்கத்தில்  செயல்பட்டு  வருவதைப்  பற்றிக்  கருத்துரைத்தபோது  அப்துல்  ரகிம்  இவ்வாறு  கூறினார்.