பிரதமர் அலுவலகத்தில் மலேசியாகினிக்குத் தடை

banஇன்று காலை  10 மணிக்கு பிரதமர்  அலுவலகத்தின்  செய்தியாளர்  கூட்டத்துக்குச்  செய்திகள்  சேகரிக்கச்  சென்ற  மலேசியாகினி  செய்தியாளரும்  படப்பிடிப்பாளரும்  தடுத்து  நிறுத்தப்பட்டனர்.

“விஜய்” எனப்  பெயர்பட்டை  அணிந்திருந்த  அதிகாரி  ஒருவர்  பிரதமர்  அலுவலகத்தில்  நுழைய  மலேசியாகினிக்கும்  மலேசியன்  இன்சைடருக்கும்(டிஎம்ஐ)  அனுமதி இல்லை  என்றார்.

கடந்த வெள்ளிக்கிழமை  மலேசியாகினி  அங்கு  சென்று  செய்தி  சேகரித்தது  அவருக்குச்  சுட்டிக்காட்டப்பட்டது. அதற்கு  அவர், “இன்று  முதல்  மலேசியாகினிக்கும்  டிஎம்ஐ-க்கும்  அனுமதி இல்லை”, என்றார்.