டிஏபி: இன்னொரு மே 13 நிகழ்வதைத் தடுக்க பிஎன்னுடன் ஒத்துழைக்கத் தயார்

kit siangஇனங்களுக்கிடையிலும்  சமயங்களுக்கிடையிலும்  வெறுப்புணர்வை  முடிவுக்குக்  கொண்டுவருவதில் பிஎன்  உண்மையிலேயே  அக்கறை  கொண்டிருந்தால்,  மலேசியாவில்  மே 13-இல்  ஏற்பட்டதைப்  போன்ற  இனக் கலவரம்  மீண்டும்  நடப்பதைத்  தடுப்பதில்  அரசாங்கத்துடன் ஒத்துழைக்க  பக்காத்தான்  ரக்யாட்  தயாராக  உள்ளது.

டிஏபி-இன்  தேசிய  ஆலோசகர்  லிம் கிட்  சியாங் இவ்வாறு  கூறினார்.

அதற்கு முன்னாள்  ஆளும்  கட்சி  ஒன்றைச்  செய்ய  வேண்டும்.  அது,  மலாய்க்காரர்- அல்லாதாரும்  முஸ்லிம்- அல்லாதாரும்  நாட்டைச்  சீர்குலைக்க  முயல்வதாகக்  குற்றம்சாட்டுவதையும்  மிரட்டுவதையும்  நிறுத்திக்கொள்ள  வேண்டும்  அல்லது  அதை  நிரூபிக்க  வேண்டும்  என்றாரவர்.