பினாங்கில் போலீஸ் காவலில் நிகழும் மரணங்களை ஆராய பணிக்குழு

custodyபினாங்கு  அரசு,  ஜனவரியிலிருந்து  போலீஸ்  காவலில்  எழுவர்  இறந்துபோனதைத்  தொடர்ந்து  அவ்வாறு  நேரும்  மரணங்களை  ஆராய   ஒரு  பணிக்குழுவை  அமைக்கிறது.

அக்குழுவுக்கு  மாநில  துணை  முதலமைச்சர் II பி.இராமசாமி  தலைமை  வகிப்பார்  எனவும் மாநில  ஆட்சிக்குழு  உறுப்பினர்களான ஜகதீப்  சிங்  டியோவும்  டாக்டர்  அரிப்  பஹார்டினும்  அதன்  உறுப்பினர்கள்  எனவும்  தெரிகிறது.

இராமசாமியைத்  தொடர்புகொண்டபோது  அப்பணிக்குழு  விரைவில்  அமையும்  என்றார்.

“இவ்விவகாரம்  தொடர்பில்  போலீசுக்கும்  சட்டத்துறைத்  தலைவருக்கும்  எழுதிய  பல  கடிதங்களுக்குப்  பதில்  இல்லை  என்பதால்  இக்குழுவை  அமைக்கிறோம்”, என இராமசாமி மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

“திங்கள்கிழமை  ஒரு  செய்தியாளர்  கூட்டத்தில் இது  பற்றி  விளக்கப்படும்”, என்றாரவர்.