காலிட் பதவிக்காலத்தை முடிக்க அனுமதிக்க வேண்டும்

syedசிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிமின் பதவிக்காலம்  முடியும்வரை  அவரை  ஒன்றும்  செய்யக்கூடாது.

காலிட்டின்  ஆதரவாளர் ஒருவர்  இப்படிச்  சொல்லி  இருந்தால்  வியப்பில்லை.  ஆனால், சொன்னவர்  அம்னோ  செராஸ்  தொகுதித் தலைவர்  சைட்  அலி  சைட் அல்ஹப்ஷி.

காலிட்டைத்  தேர்ந்தெடுத்தவர்கள்  மக்கள்  என்பதால்  அவரைப்  பதவியிலிருந்து  அகற்றும்  முயற்சி  மக்களின்  தேர்வைப்  புறக்கணிப்பதாக  அமையும்  எனவே,  அப்படிப்பட்ட  முயற்சிகளை  நிறுத்த  வேண்டும்  என்றவர்  கேட்டுக்கொண்டிருக்கிறார்.

“அது  மக்களுக்கு  அவரின்  நிர்வாகம்மீது  நம்பிக்கை  இருப்பதைக்  காண்பிக்கிறது. எனவே, அவரது பணியைச்  செய்துமுடிக்க அனுமதிப்பதே  நல்லது”, என்றாரவர்.