செம்பூர்னா துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நஜிப்பை அவமதிக்கும் செயலாகும்

sabahநேற்றிரவு  செம்பூர்னாவில்  நிகழ்ந்த  துப்பாக்கிச்  சூட்டுச்  சம்பவம்  மலேசியப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  மதிப்போ,  மரியாதையோ  இல்லை  என்பதைக்  காண்பிப்பதாக  பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்  கூறினார்.

“பிரதமர்  சாபாவில்  கால்வைத்த  வேளையில்  பயங்கரவாதிகள்  தாக்குதல்  நடத்தியிருக்கிறார்கள்  என்றால்,  அவர்கள்  என்ன  சொல்ல  வருகிறார்கள்?

“அவர்கள்  கொஞ்சம்கூட  அவரை  மதிக்கவில்லை. காலணியை  நஜிப்மீது  வீசி  எறிவதுபோல்  உள்ளது”,என்றவர்  கூறினார்.

அரசாங்கத்தால்  பாதுகாப்புக்கு  உத்தரவாதம்  அளிக்க  முடியவில்லை. போலீசாரால்  தங்களைத்  தாங்களே  பாதுகாத்துக்கொள்ள  முடியவில்லை.  அப்படியானால்  பொதுமக்களை  எப்படிப்  பாதுகாக்கப்  போகிறார்கள்  என லிம்  வினவினார்.

.