மைகாட் இல்லாத இந்தியர்கள் பணிக்குழுவில் பதிந்துகொள்ளலாம்

mykமலேசிய  அடையாள  அட்டை(மைகாட்)  இல்லாதிருக்கும்  இந்தியர்கள், இந்தியர்  சமூகம்  மீதான  சிறப்பு  அமலாக்கப்  பணிக்குழு (எஸ்ஐடிஎப்)வில்  தங்களைப்  பதிந்துகொள்ள  வேண்டும்  என  அக்குழுத்  தலைவர்  டாக்டர்  எஸ்.சுப்ரமணியம்  கேட்டுக்கொண்டுள்ளார்.

1957-க்கு  முன்னதாக  மலேசியா  வந்தவர்களும்  1957-க்குப்  பிறகு  மலேசியாவில்  பிறந்தவர்களும்  மைகாட் இல்லாதிருப்பதற்குக்  காரணம்  ஏதுமில்லை  என  மஇகா  துணைத்  தலைவருமான  சுப்ரமணியம்  கூறினார்.

மலேசியாவில் பல  இந்தியர்கள்  நாடற்றவர்களாக உள்ளனர்  அல்லது  சிவப்பு அடையாள  அட்டை  வைத்திருக்கிறார்கள்”,  என்றாரவர்.