காலிட் : அடுத்த தேர்தல்வரை நானே மந்திரி புசார்

mbகாலிட்  இப்ராகிம்  அடுத்த  பொதுத்  தேர்தல்வரை  தாமே  சிலாங்கூரின்  மந்திரி  புசார்  என்பதை  மீண்டும்  வலியுறுத்தியுள்ளார்.  ஆனால்,  ஹரி ராயாவுக்குப்  பின்  அவர்  இருக்க  மாட்டார்  என்று  ஒரு  செய்தி  உலா  வந்துகொண்டிருக்கிறது.

இன்று  செய்தியாளர்  கூட்டமொன்றில்  பேசிய  காலிட்,  கடந்த  பொதுத்  தேர்தல்  வெற்றிக்குப்  பின்னர்  மக்களுக்கு  அளித்த  வாக்குறுதிகளை  நிறைவேற்ற தமக்கு  “அவகாசம்”  தேவைப்படுவதாகக்  கூறினார்.

“அடுத்த  பொதுத்  தேர்தல்வரை  மாநிலத்தை  நிர்வகிப்பதாக  உறுதிமொழி  எடுத்திருக்கிறேன்”, என்றாரவர்.  ஆனால், அவரின்  கட்சிக்குள்ளேயே  அவர்  விரைவில்  பதவி இறங்க  வேண்டும்  என்ற  கோரிக்கைகள்  வலுத்து  வருகின்றன.

விரைவில், சிலாங்கூர்  மந்திரி  புசார்  பதவியில்  ஒரு  மாற்றம்  நிகழலாம். பக்காத்தான்  ரக்யாட்  தலைமைத்துவம்  அதைப்  பற்றி  விவாதித்து  வருவதாக  பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  கூறியிருப்பது  அதைத்தான்  கோடிகாட்டுகிறது.