ஐஜிபி: என்எஸ்டி கடத்தப்பட்ட அதிகாரிக்கு ஆபத்தை உண்டுபண்ணப் பார்க்கிறது

polisசாபாவின்  பூலாவ்  மாபுளில்  கடத்தப்பட்ட  போலீஸ் அதிகாரியை  விடுவிக்க  பிணைப்பணம்  கோரப்பட்டிருப்பதாக  செய்தி  வெளியிட்டதன்வழி  ஆங்கில  நாளேடான  நியு  ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸ்,  அவரை  அபாயத்துக்கு  உள்ளாக்கி  இருக்கிறது  என  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்  சாடியுள்ளார்.

அச்செய்தியைத்  தள்ளுபடி  செய்த  காலிட்,  மக்கள்  “வதந்திகளை  நம்பக்  கூடாது”  என்றார்.

“என்எஸ்டி  என்னுடைய  அதிகாரிக்கு  அபாயத்தை  உருவாக்கியுள்ளது”,  என  காலிட்  கூறினார்.  கடத்தப்பட்ட  அதிகாரி  பற்றிய  செய்திகளை  வெளியிட வேண்டாம்  என்று  தாம்  ஏற்கனவே  கேட்டுக்கொண்டிருப்பதை  அவர்  சுட்டிக்காட்டினார்.