காலிட்: நான் இன்னமும் எம்பி-தான்; எதுவரை என்றால்……

mbதாம்  இன்னமும்  சிலாங்கூரின்  மந்திரி  புசார்தான்  என்பதை  வலியுறுத்திய  அப்துல்  காலிட்  இப்ராகிம்,   தம்மை  வெளியேற்ற  விரும்பினால்  சட்ட  முறைப்படிதான்  அதைச்  செய்ய  வேண்டும்  என்றார்.

முன்பு, அடுத்த  தேர்தல்வரை  மந்திரி  புசாராக தொடர்வது  உறுதி  என்று  சொல்லி  வந்தவரின்  பேச்சு  இப்போது  மாறியுள்ளது.

மந்திரி  புசார்  பதவி  முடிவுக்கு  வருவதை  உணர்ந்துகொண்டவர்போல்  பேசத்  தொடங்கியுள்ளார்.

கட்சித்  தலைவர்  டாக்டர்  வான்  அசிசா  வான் இஸ்மாயிலை  மந்திரி  புசாராக்கும்  கட்சியின்  முடிவை “மதிப்பதாக”க்  கூறிய  காலிட்  அவர்  பதவி  ஏற்கும்வரை தாமே  எம்பி  என்பதை  வலியுறுத்தினார்.

எனவே, “சிலாங்கூர்  மக்களால்  சட்டப்படி  தேர்ந்தெடுக்கப்பட்ட” தாம்  தம்  மந்திரி  புசார்  கடமையைத்  தொடர்ந்து  செய்யப்போவதாகவும்  கூறினார்,