விசாரணைக்கு அழைக்கப்பட்டார் காலிட்

Khalid -Bibleபல்வேறு  விவகாரங்களுக்கு  நேரில்  வந்து  பதிலளிக்க  பிகேஆர் ஒழுங்கு  வாரியம்  சிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிமைக்  கூப்பிட்டுள்ளது.

காலிட்  நாளை  பிற்பகல்  3 மணிக்கு  பிகேஆர்  தலைமையகத்துக்கு  வர  வேண்டும்  என  வாரியத்  தலைவர்  டான்  கீ  குவோங்  கூறினார். வாரியத்தின்  காரணம்-கோரும்  கடிதத்துக்கு  காலிட்  பதிலளித்த  பின்னரும்கூட  அவர்  நேரில் விளக்கமளிக்க  அழைக்கப்பட்டிருக்கிறார்.

board“ஜூலை  22-இல்  அவர்  வெளியிட்ட  பத்திரிகை  அறிக்கை தவிர்த்து  சிலாங்கூர்  நீர் விநியோகச்  சீரமைப்பு, மந்திரி  புசாருக்கான  புதிய  அலவன்சுகள், வர்த்தக  உரிமக்  கட்டண உயர்வு,  பேங்க்  இஸ்லாத்தில்  காலிட்டின்  தனிப்பட்ட  கடன், புதிய  கிடெக்ஸ்  நெடுஞ்சாலை திட்டம்  முதலியவை பற்றியும்  காலிட்டிடம்  விளக்கம்  கோரப்படும்”, என  டான்  ஓர்  அறிக்கையில்  தெரிவித்தார்.

காலிட்டால்  வெள்ளிக்கிழமை  வர  இயலாது  என்றால்  சனிக்கிழமை  பிற்பகல்  வரலாம்  எனவும்  ஒரு மாற்று  தேதியும்  வழங்கப்பட்டிருக்கிறது.