அசிஸ் பாரி: ஆட்டம் முடிந்து விட்டது; வான் அஸிசா மந்திரி புசாராக நியமிக்கப்பட வேண்டும்

 

PKR - MB Game is overசிலாங்கூர் சட்டமன்றத்தில் பிகேஆர் தலைவர் வான் அஸிசா வான் இஸ்மாயில் பெரும்பான்மை பெற்றிருப்பதால் சிலாங்கூர் சுல்தான் அவரை மந்திரி புசாராக நியமிக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்ட வல்லுனர் அப்துல் அசிஸ் பாரி கூறினார்.

சட்டமன்றத்தை கலைக்க வேண்டும் என்ற நிலை இப்போது இல்லை. அவ்வாறு செய்வது அரசமைப்புச் சட்டத்திற்கும், ஜனநாயக கோட்பாட்டிற்கும் முரணானது என்று கூட கூறுவேன் என்று அசிஸ் பாரி மேலும் கூறினார்.

வான் அஸிசாவின் பக்கம் பெரும்பான்மை இருப்பது தெளிவாக இருப்பதால் நேரத்தையும் நேரத்தையும் வீணாக்க வேண்டிய தேவை இல்லை என்றாரவர்.

“சட்டம் தெளிவாக இருக்கிறது. மாநிலம் வழக்க நிலைக்குத் திரும்பி செயல்பட சுல்தான் வான் அஸிசாவை (மந்திரி புசாராக) நியமிக்க வேண்டும்”, என்று அசிஸ் பாரி மேலும் கூறினார்.

தமக்கு ஆதரவாக 30 சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்கள், இரு பாஸ் கட்சி உறுப்பினர்கள் உட்பட, இருப்பதாக வான் அஸிசா நேற்று கூறியிருந்தார்.