பிகேஆருக்கு எதிராக ரோஸ்சிடம் காலிட் புகார்

 

PKR - Khalid rosதம்மை கட்சியிலிருந்து வெளியேற்றியதற்கு எதிராக பதவியை தற்காத்துக் கொள்ள போராடி வரும் சுயேட்சை சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் சங்கங்கள் பதிவாளரிடம் (ரோஸ்) புகார் செய்துள்ளார்.

இப்புகார் போன் வழக்குரைஞர்கள் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிகேஆரின் ஒழுங்கு நடவடிக்கை குழு மற்றும் மத்திய தலைமைத்துவ மன்றம் கட்சியின் சட்டவிதிகளை மீறியுள்ளதா என்பது குறித்து ரோஸ் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக உத்துசான் மலேசியா செய்தி கூறுகிறது.

பிகேஆர் அதன் சட்டவிதிகளை மீறியிருப்பதாக ரோஸ்சின் விசாரணையில் தெரிய வந்தால் கட்சி அதன் பதிவை ரத்து செய்யப்படும் அபாயத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று உத்துசான் மலேசியா கூறிக்கொண்டது.