அசிசாவை சுல்தான் நிராகரித்தால் அடுத்த திட்டம் என்ன? பிகேஆர் தெரிவிக்க மறுக்கிறது

pkr-secபிகேஆர்  தலைவர்   டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில்  சிலாங்கூர்  மந்திரி  புசாராவதை  சிலாங்கூர்  சுல்தான் ஏற்க  மறுக்கும்  சாத்தியம்  இருப்பதால்  அப்படிப்பட்ட  நிலையில் என்ன  செய்யப்படும்  என்று  கேட்டதற்கு பிகேஆர்  பிடிகொடுக்காமல்  பேசுகிறது.

வெளிநாடு  சென்றுள்ள சுல்தான்  திரும்பிவரக்  காத்திருப்பதாக  பிகேஆர்  தலைமைச்  செயலாளர்  சைபுடின்  நசுத்தியோன்  கூறினார்.

“அரண்மனை  முடிவு  செய்யுமுன்னர் நாம்   முந்திக்கொள்ளக்  கூடாது. சுல்தான்  திரும்பி  வருவதற்காகக்  காத்திருக்க  வேண்டும்”, என்று  சைபுடின்  கூறினார்.

இப்போது  ஹங்கேரியில்  உள்ள  சுல்தான்  ஆகஸ்ட்  27-இல்  நாடு  திரும்புவார்.

சிலாங்கூர்  அரண்மனை வான் அசிசா  மந்திரி  புசார்  ஆவதை  நிராகரிக்கிறது  என்பதைக்  “கேள்விப்பட்டதாக”  பாஸ்  கூறிக்கொண்டிருக்கிறது.

ஆனால் பிகேஆர், சுல்தான்  நிராகரிக்கவில்லை  என்கிறது.