சைத்தான்கள் பக்கத்தானை உடைக்க சதி செய்வதாக ஷம்சுல் எச்சரிக்கை

shamபிகேஆர்  இளைஞர்  தலைவர்  பதவியிலிருந்து  வெளியேறும்  ஷம்சுல்  இஸ்கண்டர்  முகம்மட்  அகின், பக்கத்தான்  ரக்யாட்டை  உடைப்பதற்கு  கட்சிக்குள்  சதி  நடப்பதாக  எச்சரித்துள்ளார்.

கட்சியில்  உள்ள  “சண்டியர்கள்”  சிலாங்கூர்  மந்திரி  புசார்  நெருக்கடியின்போது  கட்சியைப்  பிளவுபடுத்தப்  பார்த்தார்கள்  என்றாரவர்.

யாரையும்  அவர் பெயர்  குறிப்பிடவில்லை.  ஆனால், இதை  பக்கத்தானை  உடைக்கும்  “சைத்தான்களின்  வேலை”  என்றவர்  வருணித்தார்.

“நாம்  பக்கத்தானை  வலுப்படுத்த  வேண்டும், இல்லையேல்  தொடர்ந்து  போராடுவதில்  அர்த்தமில்லை”, என  அண்மைய  தேர்தலில்  உதவித்  தலைவராக  தேர்ந்தெடுக்கப்பட்ட ஷம்சுல்  குறிப்பிட்டார்.