மகாதிர் செய்த தவறுகளுக்கு வருந்த வேண்டும்-இந்திய வர்த்தக சங்கம்

maicciடாக்டர்  மகாதிர் முகம்மட்டின்  காரசாரமான  தாக்குதலுக்கு  எதிராக  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்குப்  பரிந்து  பேசிவரும்  அம்னோ  தலைவர்களுடன்  இந்திய  வணிகர்களும்  கைகோத்துக்  கொண்டிருக்கிறார்கள்.

மகாதிர்,  நஜிப்பைத்  தாக்குவதை  நிறுத்திக்கொண்டு “சொந்த  பலவீனங்களை  எண்ணிப்பார்க்க  வேண்டும்”  என மலேசிய  இந்தியர்  வர்த்தகச்  சங்கங்களின்  கூட்டமைப்பு (மைக்கி) இன்று  ஓர்  அறிக்கையில்  கூறியது.

மகாதிர்  சொல்வதெல்லாம்  அப்பட்டமான  உண்மை  அல்ல.

“மைக்கி (மகாதிருக்கு) ஒன்றைச் சொல்லிக்கொள்ள  விரும்புகிறது. எப்போதும்  நல்லதை  நினையுங்கள், நல்லதைச்  செய்யுங்கள், நல்லதையே  பேசுங்கள்.  நீங்கள்  பதவியில்  இருந்தபோது  செய்த  தவறுகளை  எண்ணி  வருந்துங்கள்”, என  மைக்கி  தலைமைச்  செயலாளர்  எம். தேவேந்திரன்  கூறினார்.