எம்ஏஎஸ் விமானம் ‘பாதுகாப்புக் காரணங்களுக்காக’ திரும்பி வந்தது

masதோக்கியோவை  நோக்கிச்  சென்று  கொண்டிருந்த மலேசிய  விமான  நிறுவன(எம்ஏஎஸ்)த்துக்குச்  சொந்தமான  எம்எச்70   விமானத்தின் “பாதுகாப்பு”  பற்றி  சந்தேகம்  எழுந்ததால்  அது கோலாலும்பூருக்கே  திரும்பி  வந்தது.

அவ்விமானம், காலை  மணி  10.50க்கு  கேஎல்ஐஏ-இலிருந்து  புறப்பட்டது.  புறப்பட்ட  50வது  நிமிடத்தில் விமானி, விமானம்  திரும்புவது  பற்றி  அறிவித்தார்  எனப்  பயணி  ஒருவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

கோலாலும்பூரில்  இறங்கியதும் பிற்பகல்  மணி  1.15க்கு  வேறொரு  விமானத்தில்  தோக்கியோவுக்குச்  செல்லலாம்  எனப்  பயணிகளிடம்  தெரிவிக்கப்பட்டது.