சரவாக் பிகேஆர் தேச நிந்தனைச் சட்ட-எதிர்ப்பு இயக்கம் தொடங்கியது

saraசரவாக்  பிகேஆர் இளைஞர் பகுதியும்  பண்டார்  கூச்சிங்  தொகுதியும்  சேர்ந்து தேச நிந்தனைச்  சட்டத்தை  நீக்க  வேண்டும்  என்று  கோரும்  இயக்கமொன்றைத்  தொடங்கியுள்ளன. இவ்வியக்கம்  ஆண்டு  முழுவதும்  தொடரும்.

தேசிய  இளம்  வழக்குரைஞர்கள்  குழு  தொடங்கியுள்ள  இயக்கத்துடன்  தொடர்புகொண்ட  இந்த  இயக்கம்  இன்று காலை  9 மணியிலிருந்து  11 மணிவரை  குபா  ரியாவில்  தொடக்கி  வைக்கப்பட்டு  மகஜர்  அனுப்புவதற்காக   கையெழுத்து  திரட்டும்  நடவடிக்கையும்  நடந்தது.

“இந்த  இயக்கத்தை  சரவாக்கின்  மற்ற  பகுதிகளுக்கும்  கொண்டுசெல்லத்  திட்டமிட்டிருக்கிறோம்”, என  பிகேஆர்  பண்டார்  கூச்சிங்  தொகுதித்  தலைவர்  சைமன்  சியா  சை  ஜென்  கூறினார்.

1948ஆம்  ஆண்டு  தேச  நிந்தனைச் சட்டம்  அகற்றப்பட  வேண்டும்  என  நினைக்கும்  அனைவரும், பாரிசான்  நேசனலைச்  சேர்ந்தவர்கள்  உள்பட,  இந்த  இயக்கத்தில்  சேர்ந்து  கொள்ளலாம் என்றாரவர்.