மந்திரி புசார் பதவிக்கு சிலாங்கூர் சுல்தான் உத்தரவுப்படி இரண்டுக்கும் மேற்பட்ட பெயர்களைப் பரிந்துரைக்க மறுத்திருப்பது அவமதிக்கும் செயல் என்பதுடன் எதிர்ப்பைக் காட்டும் செயலுமாகும் என சிலாங்கூர் அரண்மனை கூறியுள்ளது.
பாஸ் மட்டுமே ஆட்சியாளரின் உத்தரவுக்கேற்ப நடந்து கொண்டிருக்கிறது என சிலாங்கூர் சுல்தானின் தனிச் செயலாளர் முகம்மட் முனிர் பானி ஒர் அறிக்கையில் கூறினார்.
“உத்தரவை மதிக்காத பிகேஆர் மற்றும் டிஏபியின் செயல்களால் சிலாங்கூர் சுல்தான் வருத்தமடைந்துள்ளார்.
“டிஏபி மற்றும் பிகேஆரின் செயல் ஆட்சியாளரை அவமதிக்கிறது என்பதுடன் அது சிலாங்கூர் சுல்தானுக்குச் செய்த துரோகமுமாகும்”, என்றாரவர்.
அரண்மனையின் வேண்டுகோளை அவமதிப்பதாக ஏன் கருதவேண்டும்? மாநில அரசமைப்பு சட்டத்துக்கு மதிப்பளித்து டிஎபியும் பிகேஆரும் ஜனநாயக முறைப்படிதான் பெரும்பான்மை கொண்ட ஒருவரை எம்பியாக முன்மொளிகிறது என்றுகூட கருத்தில் கொள்ளாமல்லவா??? மலேசியர் அனைவரும் மன்னராட்சியை மதிக்க வேண்டுமென்பதே மக்களின் விருப்பமும் கூட. திறனில்லாத ஒருவரை தலைவராக்குவது சரியில்லைதான். ஆனால், வான் அசிசா பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் ஆயிற்றே!!!! ஒண்ணுமே புரியிலே செலாங்கூரிலே!!!
நம் மலேசியா தாய் திரு நாடு மக்கள் ஆட்சி நாடா அல்லது மன்னர் ஆட்சி நாடா.? மக்களுக்கு தங்களது தலைவர்களை தேர்ந்து எடுக்கும் உரிமை உண்டா ? இல்லையா ? நம் நாடு என்னகே பொய் கொண்டிருக்கிறது ? யார்ராகினும் தெரிந்தவர்கள் இருந்தால் எனக்கு விளக்கவும்.
கடந்த ஒரு மாத காலமாக சிலந்கோர் மாநில அரசு ஆட்சிக்குழுவில் இந்தியர், சீனர் பிரதிநிதிகள் இல்லாமல் ஆட்சி நடைபெறுகிறது.தன் ஸ்ரீ க்ஹலிட் தலைமையில் நமது சிலந்கோர் மாநில மன்னர் முன்னிலையில் இந்தியர்களும், சீனர்களும் புறக்கணிக்க பட்டுள்ளனர்.இதை கேட்பதக்கு நமக்கு நாதி இல்லாமல் இருக்கு.இதே கதி தன PKR கட்சியில் உள்ள மாலை காரர்களுக்கும்.சிலந்கோரில் நீதி இருகிராதா ?