தேச நிந்தனைக் குற்றச்சாட்டின்கீழ் மேலும் ஒரு சமூக ஆர்வலர்மீது குற்றச்சாட்டு

abuஆட்சியாளர்களை  அவமதித்தார்  என்பதற்காக  ஏனிதிங்  பட்  அம்னோ (ஏபியு) இயக்கத்தைச்   சேர்ந்த  சமூக ஆர்வலர்மீது  தேச  நிந்தனைக்  குற்றம்  சுமத்தப்பட்டுள்ளது.

அலி அப்ட்  ஜலில்,  முகநூலில் ‘Regimen Anarki’ என்ற  தலைப்பில்  பதிவிட்டிருந்ததற்காக   சுமத்தப்பட்ட   அக்குற்றச்சாட்டை  மறுத்து விசாரணை  கோரினார்.

செஷன்ஸ்  நீதிமன்ற  நீதிபதி  அஹ்மட்  பைருஸ் முகம்மட் புஸி, ஒரு  பிணையாளியின்  உத்தரவாதம்  மற்றும்  ரிம5,000  பிணையில்  அவரை  விடுவித்தார்.