அன்வார்: நீர் வினியோக ஒப்பந்தத்தில் பலனடைந்தவர்களின் பட்டியலை எம்பி வெளியிட வேண்டும்

 

Anwar and MB on list of croniesசிலாங்கூர் மாநில முன்னாள் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் செப்டெம்பர் 22 இல் பதவியிலிருந்து விலகுவதற்கு முன்பு கையொப்பமிட்ட நீர் வினியோக ஒப்பந்தத்தில் வழி பெரும் பலனடந்த நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்டவர்கள் ஆகியோரின் பெயர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று புதிய மந்திரி புசார் அஸ்மின் அலியை எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் கேட்டுக் கொண்டுள்ளார்.

பல நூற்றுக்கணக்கான மில்லியன் ரிட்கிட்கள் சம்பந்தப்பட்டுள்ள இந்த நீர் வினியோக ஒப்பந்தத்தின் வழி பலன் பெறுபவர்கள் பற்றிய தகவலை வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில் சிலாங்கூர் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பிகேஆர் நடப்பில் தலைவரான அன்வார் இப்ராலிம் கூறுகிறார்.

இதில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர் பட்டியலைத் தயாரிக்கும்படி அஸ்மின் அலி கேட்டுக் கொள்ளப்பட்டதாக அன்வார் கூறினார்.

“இந்த ஒப்பந்தத்தின் கீழ் மக்கள் இலாபம் அடைவது குறித்து நான் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால், அதற்கான செலவை யார் கொடுப்பது என்பதாகும்”, என்றார் அன்வார்.