மலேசியக் கடல்படை கலமொன்றைக் காணவில்லை

nav yஏழு பணியாளர்களுடன்  அரச  மலேசிய  கடல்படையின்  பீரங்கிப்  படகு  ஒன்று  நேற்றிரவு  சாபா கடல்கரைக்கு  அப்பால்    காணாமல்போனதைக்  கடல்படைத்  தலைவர்  அப்துல்  அசீஸ்  ஜாபார்  டிவிட்டரில்  உறுதிப்படுத்தியுள்ளார்.

அதைத்  தேடும்  பணியில்  நேற்றிரவிலிருந்து  ஐந்து  கப்பல்கள்  ஈடுபட்டிருப்பதாகவும்  அவற்றுடன்  இன்று  காலை  அரச  மலேசிய  ஆகாயப்படை  விமானங்கள்  இரண்டும்  சேர்ந்து  கொண்டதாகவும்  அப்துல்  அசீஸ்  கூறினார்.

வானிலை  மோசமாக  இருந்ததால்  விமானங்களை  முன்பே  அனுப்ப  முடியவில்லை  என்றாரவர்.