30 விழுக்காடு சம்பள உயர்வு: அரசு ஊழியர்கள் கோரிக்கை

cuepacsஅடுத்த  ஆண்டு  பொருள், சேவை  வரி  நடைமுறைக்கு  வருவதையொட்டி அரசாங்கம்,  அரசு  ஊழியர்களின்  சம்பளத்தை  உயர்த்த  வேண்டும்.

அரசு  ஊழியர்  சங்கங்களின்  கூட்டமைப்பான  கியுபெக்ஸ், அரசு  ஊழியர்களுக்கு  30  விழுக்காடு  சம்பள  உயர்வு  கொடுக்கப்பட  வேண்டும்  எனக்  கோரிக்கை  விடுத்துள்ளது.

அப்படிக்  கொடுக்கப்பட்டால்  ரிம900  சம்பளம்  பெறும்  அரசு  ஊழியர்களுக்கு  ரிம300  கூடுதலாகக்  கிடைக்கும்  என  கியுபெக்ஸ்  துணைத்  தலைவர் I சைனல்  இஸ்மாயில்  கூறினார். இரண்டு  மாத போனசும்  வழங்கப்பட  வேண்டும்  என்றவர்  பரிந்துரைத்தார்.

2007-இலிலிருந்து  அரசு  ஊழியர்களின்  சம்பளம் திருத்தி  அமைக்கப்படவில்லை  என்பதால் இக்கோரிக்கை  நியாயமானதே  என்றாரவர்.