இஸ்மா தலைவர் மீதான தேச நிந்தனை வழக்கு ஒத்திவைப்பு

ismaஇன்று  விசாரணை  செய்யப்பட்டவிருந்த  இஸ்மா  தலைவர்  அப்துல்லா  சேய்க்-கின்  தேச  நிந்தனை  வழக்கு  ஒத்திவைக்கப்பட்டது.

தேச நிந்தனைச் சட்டம் 1948 இன் சட்டப்பூர்வ தன்மை குறித்து யுனிவர்சிடி  மலாயா  இணைப்  பேராசிரியர்  அஸ்மி  ஷாரோம்  உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ள  வழக்கின்  முடிவு  தெரியும்வரை  விசாரணையைத்  தள்ளிவைக்க வேண்டும்  என வழக்குரைஞர்  சலிம்  பஷீர்  கேட்டுக்கொண்டதை  ஏற்று  செஷன்ஸ்  நீதிமன்ற  நீதிபதி  வழக்கை  ஒத்திவைத்தார்.

அவ்வழக்கு  இன்று  தொடங்கி  மூன்று  நாள்களுக்கு  விசாரிக்கப்பட விருந்தது.

ஒத்திவைப்புக்கு  அரசு  வழக்குரைஞர்  அபாஸப்ரி  முகம்மட்  அப்பாஸும்  மறுப்புத்  தெரிவிக்கவீல்லை.