ஜாஹிட்: பிபிஎஸ் போலீஸ் வேலையை எடுத்துக்கொள்ள முயன்றது

zahiபினாங்கு அரசால்  ஏற்படுத்தப்பட்ட  தன்னார்வ  காவல்  படை(பிபிஎஸ்)  போலீசின்  பணிகளை  எடுத்துக்கொள்ள  முன்றது  எனவும்  அம்மாநிலத்தில்  குற்ற  விகிதம்  குறைந்தததற்கும்  அதற்கும்  தொடர்பில்லை  என்றும்  உள்துறை  அமைச்சர்  அஹ்மட் ஜாஹிட்  கூறினார்.

பிபிஎஸ்  உறுப்பினர்கள்  வாகனங்களைப்  சோதனையிடும் வேலையை  மேற்கொண்டதாக  தமக்குப்  புகார்கள்  கிடைத்துள்ளன என்றாரவர். அது  போலீசின்  வேலை  என்றவர்  சொன்னார்.

“அது,  போலீசுக்கு  உதவி  செய்வதாகக்  கூறப்படும்  ஓரு  அமைப்பு  செய்யும்  வேலை  அல்ல. மாறாக, போலீஸ்  மற்றும்  பாதுகாப்பு  அதிகாரிகளின்  அதிகாரத்தை எடுத்துக்கொள்ளும்  முயற்சி”, என  அமைச்சர்  நாடாளுமன்றத்தில்  கூறினார்.