எதிர்ப்புக்கிடையே அன்வாரின் சொற்பொழிவை நடத்துவதில் மாணவர்கள் தீவிரம்

umபல்கலைக்கழக  அதிகாரிகளின் மருட்டலையும்  பொருட்படுத்தாமல்  எதிரணித்  தலைவர்  அன்வாரின்  சொற்பொழிவுக்கு  ஏற்பாடு  செய்வதில்  யுனிவர்சிடி  மலாயா  மாணவர்  சங்கம் (பிஎம்யுஎம்) உறுதியாக  உள்ளது.

சொற்பொழிவு  நடத்தப்படுவது  பற்றிப்  பல்கலைக்கழகம்,  அதன்  ஏற்பாட்டாளரும்  பிஎம்யுஎம்  தலைவருமான  பாஹ்மி  சைனலுக்கு  விளக்கம் கேட்டுக்  கடிதம் அனுப்பியிருப்பதாக  இன்று  பெரிதா  ஹரியான்  கூறியது.

ஆனால்,  அச்சொற்பொழிவு  அக்டோபர்  27-இல்,   அதாவது அன்வாரின்  குதப்புணர்ச்சிக்  குற்றச்சாட்டு  மீதான  மேல்முறையீடு  கூட்டரசு  நீதிமன்றத்தில்  விசாரணைக்கு  வருவதற்கு  முதல்  நாள்  நடக்கும்  என  பிஎம்யுஎம்  திட்டவட்டமாகக்  கூறுகிறது.