“அல்லா” புத்தகங்கள் விடுவிக்கப்பட்டன

 

Allah books released1கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட “அல்லா” என்ற சொல்லைக் கொண்ட பொருள்களை விடுவிக்குமாறு உள்துறை அமைச்சர் ஸாகிட் ஹமிட் உத்தரவிட்டுள்ளார்.

அப்பொருள்கள் கைப்பற்றப்பட்டதற்கும் தமது அமைச்சுக்கும் சம்பந்தமில்லை என்று கூறிய அவர், அது கஸ்டம்ஸ் இலாகாவின் செயல் என்றும் அந்த இலாக நிதி அமைச்சின் கீழ் வருகிறது 1-hamidi1என்றும் அவர் கூறினார்.

“அப்பொருள்கள் இந்தோனேசியாவிலிருந்து வந்தன. சபாவுக்கு அனுப்பப்படுவதற்காக அவை கேஎல்ஐஎவில் இறக்கப்பட்டன.

“அப்பொருள்கள் சபாவில் பயன்படுத்தப்படுவதற்கானவை என்பதால், அவை திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்”, என்பது உள்துறை அமைச்சின் கருத்தாகும் என்றாரவர்.

கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு சபாகான் ஆயரிடமிருந்து 574 சமய நூல்களும், 419 சிடிகள் மற்றும் 5 சிவிடிகள் கைப்பற்றப்பட்டன.