பினாங்கு முதலமைச்சர் பதவிக்குச் சுழல்முறையை அறிமுகப்படுதலாம் என டிஏபி தஞ்சோங் பூங்கா சட்டமன்ற உறுப்பினர் தே ஈ சியு பரிந்துரைத்துள்ளார். அத்துடன் ஒருவர் இரண்டு தவணைக்கு மட்டுமே பதவி வகிக்கலாம் என்றும் வரையறுக்கப்பட வேண்டும்.
இதன்வழி, மகளிர் உள்பட, மற்ற தலைவர்களுக்கும் பினாங்கை ஆட்சிசெய்யும் வாய்ப்பு கிடைக்கும் என்றவர் சொன்னார்.
“ஜனநாயகக் கோணத்தில் பார்த்தால் இது ஒரு நல்ல கருத்துத்தான். இது நனவாக எல்லாத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்”, என்றவர் கேட்டுக்கொண்டார்.
அவரது பரிந்துரையை எதிரணித் தலைவர் ஜஹாரா ஹமிட்டும் பூலாவ் திக்குஸ் சட்டமன்ற உறுப்பினர் யாப் சூ ஹூய் ஆகியோர் வரவேற்றனர்.


























ஒரு தமிழன் பினேங் மாநிலத்தை ஆச்சி செய்யவேண்டும்.
இப்படி சொல்லித்தான் கெரக்கான் ஆட்சியை அம்னோ கவுத்தது. இப்ப அதே வேலையை செய்ய இவரு சிண்டு முடிகின்றாரா என்பதுதான் என்னுடைய டவுட்!. நாராயணா, நாராயணா பினாங்கு டி.எ.பி. ஆட்சியைக் காப்பாத்து.
இந்த 2 அம்னோ காரர்களும் அம்னோ ஆட்சிபுரியும் மாநிலங்களிலும் இதே போன்று சுழல்முறை கொண்டுவர பரிந்துரைக்க வேண்டும். அதுவும் 1வர் 1தவனை பதவி வகித்தால் போதும் எனக்கோர வேண்டும்.. PM-கும் இதே முறையிலான கட்டுப்பாடு வேண்டும் எனக் கோருங்கள்.. நீங்கள் நிச்சயம் செய்வீர்கள்;. எதிலும் பாகுபாடு பார்க்காத, பாராட்டப்பட வேண்டிய உத்தம அம்னோ புத்திரர்கள் அல்லவா நீங்கள்.!!!!!!!!!!!! ஆட்சி கைமாறியதும் அனுபவிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம். புரிகிறது எங்களுக்கு.
உருப்படாத யோசனை!
இந்த பரிந்துரை எப்படி சாத்தியமாகும் ….??…லிம் கிட சியாங் என்ன இளிச்சவாயனா….?…கூடிய விரைவில் DAP மற்றும் PKR குடும்ப அரசியல் கட்சியாக பிரகடனம் படுத்தபடும்….
அடிசிகிட்டு …