தேவாலய வழிபாடு ‘இரைச்சலாக இருந்ததால்’போலீஸ் தடுத்து நிறுத்தியதாம்

necfமிகுந்த  இரைச்சலாக  இருப்பதாய்  அண்டைவீட்டார்  புகார்  செய்ததை  அடுத்து  காஜாங் தேவாயம்  ஒன்றில்  நடைபெற்றுக்  கொண்டிருந்த  ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டை  போலீசார்  தடுத்து  நிறுத்தியதாகக்  கூறப்படுகிறது.

இச்சம்பவம்  காஜாங், பெதானி  தேவாலயத்தில்  கடந்த  ஞாயிற்றுக்கிழமை  நடந்தது. வழிபாடு  நடந்துகொண்டிருந்த  நேரத்தில் போலீஸ் கடைவீடு  ஒன்றில்  அமைந்திருந்த  தேவாலயத்துக்குள்  சென்றார்களாம்.

“வழிபாட்டை  இடையில்  நிறுத்த  வேண்டாம்  என்று  அவர்களிடம்  கூறினோம். முடியும்வரை காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டோம்”, என தேசிய  எவெங்கலிகல்  கிறிஸ்டியன்  ஃபெல்லோசிப் (என்இசிஎப்) செயல்முறை  செயலாளர்  அல்ப்ரெட்  தயிஸ்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

“அவ்விவகாரம்  தொடர்பில் பாதிரியாரின்  முழு  அறிக்கைக்காகக்  காத்திருக்கிறோம்”, என்றாரவர்.

இதன்  தொடர்பில்  மலேசியாகினி  போலீசின்  கருத்தைப்  பெற  முயன்றது. முடியவில்லை.