இஸ்மாயில் வருத்தப்படுகிறார் ஆனால், மன்னிப்பு கேட்க மாட்டார்

sorryசீன  வர்த்தகர்கள்  குறித்து  சர்ச்சைக்குரிய  கருத்தைத்  தெரிவித்ததற்கு  மன்னிப்புக்  கேட்பதில்லை  என்பதில்  பிடிவாதமாக  இருக்கிறார்  விவசாயம்,  விவசாயம்  சார்ந்த  தொழில்  அமைச்சர்  இஸ்மாயில்  சப்ரி.

ஆனால், தம் கருத்துக்கு  இனச் சாயம்  பூசப்பட்டு  இன  விவகாரமாகப்  பார்க்கப்படுவதை  எண்ணி  அவர் “வருத்தம்”  தெரிவித்தார்.

இந்த “வருத்தம்” மன்னிப்பு  எனப்  பொருள்படுமா  என வினவியதற்கு இது  மன்னிப்பு  கேட்பதாகாது  என்று  கூறி விட்டார்.

இஸ்மாயில்,   மலாய்க்காரர்கள்  விலைகளைக்  குறைக்காத  சீன  வர்த்தகர்களைப்  புறக்கணிக்க  வேண்டும்  என்று  முகநூலில் பதிவிட்டுப்  பொல்லாப்புக்கு  ஆளானார்.