புவாவின் மகன் அமெரிக்காவில் சூதாட்டக் குற்றச்சாட்டை ஒப்பினார்

gambleசூதாட்ட  மன்னன் பால்  புவாவின்  மகன்  டேரன்  புவா,  உலகக்  கிண்ணக்  கால்பந்து  போட்டியின்போது  சட்டவிரோத  சூதாட்டக்  கட்டமைப்பு  ஒன்றை  நடத்திய  குற்றச்சாட்டை  ஒப்புக்கொண்டிருக்கிறார்.

டேரனுக்கு  மலேசியாவுக்குத்  திரும்ப  வேண்டும்  என்ற  ஏக்கம்  வந்து  விட்டதாம்.  அதனால்தான் குற்றச்சாட்டை  ஒப்புக்கொள்வதென்ற  முடிவுக்கு  வந்திருப்பதாக  Casino.org  இணையத்  தளம்  கூறிற்று.

“மகன்  ஒப்புக்கொண்டுள்ள  வேளையில்  புவா  சீனியர் குற்றச்சாட்டை  எதிர்த்துப்  போராடுவாரா  என்பதைப்  பொறுத்திருந்துதான்  பார்க்க  வேண்டும்”, என்றும்  அது கூறியது.

பால்  புவா  வழக்கு  மலேசியாவில்  பரபரப்பை  ஏற்படுத்திய  வழக்காகும்.  அதற்கு பால் புவா  தேசிய  பாதுகாப்பு  விவகாரங்களில்  உதவியுள்ளார்  என  உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  அவருக்கு  ஆதரவுக்  கடிதம்  எழுதியதும்  ஒரு  காரணமாகும்.