பெர்சே: பேரணியில் குழப்பம் ஏற்பட்டால் போலீசே பொறுப்பு

bersபோலீஸ்  இன்று  பிற்பகல்  நடக்கும்  கித்தா  லவான்  பேரணியின்போது  தன்  கடமையைச்  சரியாகச்  செய்து   பேரணி  அமைதியாக  நடப்பதை  உறுதிப்படுத்த  வேண்டும்  என  பெர்சே  நினைவுறுத்தியுள்ளது. பேரணியில்  குழப்பம்  ஏற்பட்டால்  அதற்கு  அவர்கள்தான்  பொறுப்பேற்க  வேண்டும்.

“பேரணி  அமைதியாக  நடைபெற  உதவ  வேண்டுமென  பெர்சே  போலீஸ்  படைத்  தலைவரைக்  கேட்டுக்கொள்கிறது. பேரணியில்  கலந்துகொள்வோரிடம்  பகை  பாராட்ட  வேண்டாம் அவர்களுக்கு  வெறுப்பூட்ட  வேண்டாம்.

“அமைதியாக  ஒன்றுகூட  மக்களுக்குள்ள அரசமைப்பு  உரிமையை  நிலைநாட்ட  போலீஸ்  உதவ  வேண்டும்”, என  பெர்சே  ஓர்  அறிக்கையில்  கூறியது.