கித்தா லவான் பேரணி திட்டப்படி நடக்கும்

rally lawஇன்று  கோலாலும்பூரில்  நடைபெறவுள்ள  பேரணியை  சட்டவிரோத  பேரணி  என்று  போலீஸ்  அறிவித்துள்ளது.

சோகோ  விற்பனை  மையத்துக்கு  வெளியில்  நடைபெறும்  கித்தா  லவான்  பேரணி  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  விடுவிக்கப்பட  வேண்டும்  என்ற  கோரிக்கையையும்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  பதவி  விலக  வேண்டும்  என்ற  கோரிக்கையையும்  முன்வைத்து  நடத்தப்படுகிறது.

இப்பேரணிக்குப்  பக்கத்தான்  ரக்யாட்  ஆதரவு  எந்த  அளவுக்கு  உள்ளது  என்பது  தெரியவில்லை.

அதில்  கலந்துகொள்லுமாறு  பாஸ்  அதன்  ஆதரவாளர்களுக்கு  எந்த  உத்தரவும்  இடவில்லை.  பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்கும்  மாநிலப்  பிரதிநிதிகளுக்கு  மாநிலத்தில்  நிறைவேற்ற வேண்டிய  பொறுப்புகள்  இருக்கும்  அவற்றில்  கவனம்  செலுத்த  வேண்டும்  என்று  அறிவுறுத்தியுள்ளார்.

பேரணியைப்  பிற்பகல்  மூன்று  மணிக்குத்  தொடங்க  திட்டமிடப்பட்டுள்ளது.